அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே

isaianban
1

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே

சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுகம் பல தரும் தமிழ்ப் பா

சுவையொடு கவிதைகள் தா
சுவையொடு கவிதைகள் தா
 
தமிழே நாளும் நீ பாடு
தமிழே நாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே


தேனூறும் தேவாரம் இசைப்
பாட்டின் ஆதாரம்
தேனூறும் தேவாரம் இசைப்
பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே
தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே
நாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே


பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலை பலவும் பயில வரும்
அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாய
தமிழே நாளும் நீ பாடு


அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் சுகம் பல தரும் தமிழ்ப் பா
தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு


அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே

----------------------------------------------------------

இந்த பாடல் கவிஞர். புலமைப்பித்தன் இயற்றி, கோயில் புறா என்ற திரைப்படத்திற்காக இளையராஜா அவர்கள் இசையமைத்தது.

இந்தப்பாடல் எனக்கு மிக, மிக பிடித்தப்பாடல். ஒரு நாளைக்கு எத்துனை தடவைகள் வேண்டுமானாலும் கேட்கலாம், அப்படி ஒரு ரசனையான பாடல்.

இசையோடு, இசைவாக தாய் தமிழை அமுதம் போல் அழகாக வடித்திருப்பார் கவிஞர். புலமைப்பித்தன். இதில் இளையராஜா வின் இசையும், குரல் அரசிகளான பி.சுசீலா மற்றும் உமாரமணன் குரல்களும் மிகப் பெரிய பலம்.

 இந்த சுட்டியில் சென்று  நீங்கள் அந்த பாட்டை கேட்டு, பார்த்து, படித்து ரசிக்கலாம்.

-------------------------------------
உங்கள். இசையன்பன்............

Post a Comment

1Comments
  1. தமிழிசையே தரணியிலே முதலிசையே... தமிழே நாளும் நீ பாடு.... அருமையான வரிகள், அதற்கு உயிரூட்டிய இசைஞானிக்கு வானளாவிய நன்றிகள். வரிகளை வரைந்து வைத்தமைக்கு உமக்கும் எனது நன்றிகள், ஐயா!

    ReplyDelete
Post a Comment